Tuesday, March 12, 2013

மாணவர் போராட்ட அறிமுகமும் கோரிக்கைகளும்.

லயோலா கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஈழ தமிழ் மக்களுக்கான விடுதலை போராட்டம். இன்று தமிழகம் முழுவதும் தனது சுதந்திர சிறகுகளை விரித்து பறந்து கொண்டுள்ளது. இந்த இணையத்தின் மூலமாக போராட்ட நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும். மாணவர்கள் தங்கள் போராட்டத்திற்கான துண்டறிக்கைகள் மற்றும் தேவையான போராட்ட கோரிக்கைகளையும் அறிந்துகொள்ள இந்த இணையம் உதவும். மேலும் போராட்ட நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள உதவும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது.

இந்த மாணவர்கள் போராட்டத்தின் கோரிக்கைகள் 


  1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நாவில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மான ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை.
  2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
  3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும் 
  4. சிங்களஇனவெறிஅரசின்துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும். 
  5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் 
  6. உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும். 
  7. ஆசியநாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது..
  8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 
  9. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

1 comment:

  1. emidam oru inaiya thalam ullathu athai inthamanavar poraadathukkaka samarpikiren manarvakal thodarpukollungal tamileelthayakam@gmail.com

    ReplyDelete