Tuesday, March 12, 2013

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரி மாணவர் போராட்டம்


ஒரு இனத்தையே அழிக்கும் நோக்குடன் ஒரு சர்வாதிகாரம் அல்லது பேரினவாதம் நடந்து கொண்டது என்பதை இது வரை கேள்விப்பட்டுமே வந்த தமிழினத்தின் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது ஆனால் இதை இந்த சர்வதேச சமூகம் இது வரை இனப்படுகொலை என்று குறிப்பிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வு என்று பேசிவருவது, இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்துவிடுங்கள் இந்த கசப்பான மருந்தை கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுவது போல் உள்ளது ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம். இந்த தீர்மானம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் தான் கசப்பானதாக உள்ளது. உண்மையில் சிங்கள பேரினவாத அரசிற்கு இது மேலும் ஒரு வருடம் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் வாய்ப்பையே வழங்கி வருகிறது. சிங்கள அரசின் மும்மொழி கொள்கை திட்டம் என்பது போன்ற திட்டங்களால் தமிழ் பண்பாடு என்பதை ஒழித்துக் கட்டும் வேலைகளுக்கு வழிவகை செய்கிறது.

மனித உரிமை ஆணயத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் இந்த தீர்மானம் மனித உரிமை மீறல்களை கூட பேசும்பொழுது மயிலிறகால் வருடிகொடுத்து தான் பேசுகிறது. தமிழ் மக்களுக்கான தீர்வாகச் சொல்வது, மனித உரிமை ஆணையம் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு நன்றியையும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக 13வது சட்டதிருத்ததை கைவிடக்கூடாது என்று சொன்ன சிங்கள உச்சநீதிமன்ற நீதியரசரை பதவியிலிருந்து நீக்கிய சிங்கள அரசு தனது சட்டத்தை சர்வதேச சட்டத்திற்கு நிகராக வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறது. இதன் மூலமாக ஒரு குற்றவாளி தனது குற்றத்தை சர்வதேச சட்டத்திற்க்கு இணையாக கொண்டுவந்து விசாரிக்க வேண்டும் என்கிறது. குற்றவாளியே தன் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த தீர்மானம் எந்த வகையில் ஈழத்தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் என்பது தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் செயல்.

மேலும் பிப்ரவரி 15ம் தேதி 2013, அன்று இந்த அமெரிக்க தீர்மானம் வலியுறுத்தும் LLRC மூலமாக கொண்டுவரப்பட்ட இராணுவ நீதிமன்றத்தில் இலங்கை இராணுவம் எந்தவிதமான போர்குற்ற மீறல்களையும் செய்யவில்லை என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க சொன்னால் இத்தகைய தீர்ப்புகள் தான் வரும் என்பதை ஏன் சர்வதேச சமூகம் உணர மறுக்கிறது என்பது புரியவில்லை. போர் முடிந்து இது வரை நான்கு ஆண்டுகளில் சர்வதேச பத்திரிக்கையாளர்களையோ அல்லது மனித உரிமை அமைப்புகளையோ ஈழத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் அனுமதிக்காத சிங்கள பேரினவாத அரசு, ஏன் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளையை அனுமதிக்க மறுக்கிறது, ஐ.நாவின் தலைமை செயலாளர் பான் கீ மூன் அவர்கள் நியமித்த நிபுணர் குழுவை அனுமதிக்க மறுத்த சிங்கள பேரினவாத அரசு எப்படி தமிழர்களுக்கான தீர்வை கொடுக்கும். இவைகளை குறித்த எந்தவித கண்டனத்தையும் அமெரிக்காவின் தீர்மானம் சொலல்வில்லை, ஆனால் ஐ.நா மனித உரிமை பாதுகாப்பு செயலகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லியுள்ள சர்வதேச நீதி விசாரணையை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறது, அதன் மீதான ந்டவடிக்கைக்கு ஒரு காலவரையறையையோ அல்லது மனித உரிமையை பாதுகாக்கும் பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் சர்வதேச விசாரணையை கொண்டு வருவோம் என்றோ அமெரிககாவின் தீர்மானத்தில் இல்லை.

இலங்கையின் அரசியல் சாசனம் என்பது தோற்று போனதாலேயே 1948ல் இருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு நாட்டின் அரசியல் சாசனம் என்பது அந்நாட்டின் அனைத்து குடிமக்களையும் சம உரிமையுடன் நடத்துவதாக அமையவேண்டும் ஆனால் என்று எந்த அரசியல் சாசனம் தமிழர்களின் கல்விகற்கும் உரிமையை கூட கல்வி தரப்படுத்துதல் சட்டம் என்ற பெயரில் பறித்ததோ அன்றே தோற்றுப்போய்விட்டது.  தோற்றுப்போன அரசியலமைப்பை அங்கிகரித்து அதன் கீழ் நடவடிக்கை எடுக்க கூறுகிறது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம். ஒரு தோற்றுப்போன் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும் ஒரு நாட்டின் இறையாண்மை என்பதும் தோற்றுப்போனதே அப்படி தோற்றுப்போன இறையாண்மையற்ற நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பது என்பது சர்வதேசத்தின் கடமை. இதற்கு இந்தியாவும் இலங்கையுடன் துணை போவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா சர்வதேசத்தின் முன்பு இலங்கையை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் இதை வலியுறுத்தியே மாணவர்களின் போராட்டம் நடைபெறுகிறது.

“தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தேவை சுதந்திரமே தவிர பிச்சையாக போடப்படும் நிவாரணங்கள் அல்ல”

கோரிக்கைகள்

1.      அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நாவில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மான ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை.
2.      இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
3.      சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
4.      சிங்களஇனவெறிஅரசின்துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
5.      தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
6.      உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
7.      ஆசியநாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது..
8.      தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
9.      ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.


2 comments:

  1. வணக்கம் மாணவர்களே உங்கள் போராட்டம் வெல்லட்டும் வென்றால் தான் ஈழம் மட்டும் அல்ல தமிழகம் கூட தமிழர் கையிலே இருக்கும் அல்லது குமரி கண்டம் மாதிரி வரலாற்று நூல்களிலே கூட இருக்கும் என்பதே ஐயமே.

    மிக முக்கியம் மாணவர்கள் போராட்டம் ஒருங்கு இணைக்க படும் பேச்சாளர்கள் யார் யார் என்று குறிக்க பட்டு அவர்கள் மட்டுமே அதிகார் பூர்வமா ஊடகங்கள் இக்கு செவ்வி கொடுக்க அனுமதி தரனும் அவர்கள் யாவரும் நன்கு பயிற்சி கொடுத்து ஒரே மாதிரி தெளிவா பேசணும் அல்லது எதிரி ஊடகங்கள் எதிரி அரசியல் வாதிகள் மாணவர் போராட்டத்தை சிதைபார்கள் என்பது நிச்சயம். வெல்க தமிழ் வெல்க தமிழர் போராட்டம்

    ReplyDelete
  2. vellattum poraaattam. kadaisi varaikkum thurai nirpom.

    ReplyDelete